மதுரை, ஜூன் 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட 9 ஆவது மாநாடு ஞாயிறன்று ஜெய்ஹிந்த்புரம் அண்ணாமலை மகாலில் தோழர் பா.ரத்தினம், மருத்து வர் செல்வராஜ் நினைவரங் கில் நடைபெற்றது . மாநாட் டிற்கு ஸ்ரீரசா, முருகேசன், கா. இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ் சலி தீர்மானத்தை சரவணக் குமார் வாசித்தார். மாநில துணைப்பொதுச் செயலா ளர் கவிஞர் லெட்சுமி காந்தன் துவக்கி வைத்து பேசினார். கலை இலக்கிய அறிக்கை ஸ்ரீரசா, வேலை அறிக்கையை செயலாளர் அ. ந. சாந்தா ராம், வரவு - செலவு அறிக்கை யை மானிடன் ஆகியோர் சமர்ப்பித்தனர். கலை இலக்கிய பெருமன்ற மாவட் டச் செயலாளர் பா. ஆனந்த குமார், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலா ளர் கே. வேலாயுதம், புற நகர் மாவட்டச் செயலாளர் மீ. லெனின் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். மாநில செயற் குழு உறுப்பினர் ந. ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். ஜெய்ஹிந்த்புரம் கிளைச் செயலாளர் யமுனா சரவ ணன் நன்றி கூறினார். மாநாட்டில் மாவட் டத் தலைவராக கா. இளங் கோவன், செயலாளராக ஸ்ரீரசா, பொருளாளராக மானு டன் உள்பட 39 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மதுரை மாநகரில் இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சி கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் போன்ற பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் அமைப்பு களின் கலை இரவு நிகழ்ச்சி களை இரவு முழுவதும் நடத்து வதற்குத் தடையின்றி அரசு அனுமதி வழங்க வேண்டும். மகாகவி பாரதி மதுரை யில் வாழ்ந்ததை நினை வூட்டும் வகையில் மேற்கு வெளிவீதி, வடக்கு வெளி வீதி சந்திப்பில் அவருக்கு முழு உருவச் சிலை அரசு சார்பில் நிறுவப்பட வேண்டும். மதுரை தமுக்கம் மைதான வளாகத்துக்குள் கட்டப்படும் பிள்ளையார்கோவிலை உட னடியாக அப்புறப்படுத்தி , தமுக்கம் வளாகத்தை சாதி மத பேதமற்று அனைத்து மக் களுக்கானதாக வைத்தி ருக்க வேண்டும். பல்வேறு அரிய வர லாற்று நூல்களை எழுதிய வரலாற்று எழுத்தாளர் என். ராமகிருஷ்ணனின் நூல் களையும் மேடைக் கலை வாணர்-முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்.நன் மாறன் எழுதிய நூல்களை யும் தமிழக அரசு நாட்டுடை மையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.