திண்டுக்கல், ஏப்.3- பணிச்சுமையால் மதுரையில் அரசு அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு திண்டுக்கல் ஆட்சியரகத்தில் வேளாண் அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகராஜன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி, வட்டக் கிளைத்தலைவர் எஸ்.விஜயராகவன், வட்டக்கிளைச் செயலாளர் ஆ.ராஜாமணி மற்றும் காளிராஜ் ஆகி யோர் பேசினர்.