புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தைக் கலந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் திங்களன்று ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநகர் மாவட்டத் தலைவர் மாவட்டச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், புறநகர் மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, செ.ஆஞ்சி, இரா.லெனின் (சிஐடியு, எஸ்.பி.இளங்கோவன் (தவிச), பா.தமிழரசன் (வாலிபர் சங்கம்) உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.