‘எங்கே எங்கள் எய்ம்ஸ்?’ என்ற முழக்கத்துடன் மதுரையில் ஜனவரி 24 அன்று பெரும் போராட்டம் நடைபெறுகிறது. இதனை விளக்கியும் ஆழ்வார்புரம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூங்கில் கடை தெருவில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம். நமச்சிவாயம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன், துணை மேயர் டி. நாகராஜன், பகுதிக்குழு செயலாளர் வி.கோட்டைச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் க.திலகர், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், வாலிபர் சங்க பகுதிக்குழு செயலாளர் கே.கார்த்திக் ஆகியோர் பேசினர். எஸ்.சேவுகன்,பிச்சை முகமது,மாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.