கட்சியிலிருந்து நீக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 2வது பகுதிக் குழுவுக்கு உட்பட்ட 79-வது வார்டு கட்சி உறுப்பினர் எம்.பாலமுருகன் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன் தெரிவித்துள்ளார்.
காலமானார்
சிவகங்கை, செப்.1- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைக்கிராமத்தில் சோமகுருநாதர் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் புபேஷ்பாண்டியனின் தந்தையாவார் அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாலுகா செயலாளர் ராஜூ மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
மதுரை, செப். 1- மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் தலைமையில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மெய்யியலாளர் கரு.ஆறுமுகத்தமிழன் ‘வாழும் கலை’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜமோகன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முனைவர்.தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அனைவருக்கும் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது. மேலும், கல்விக் கடனுதவி பெறுதல், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. இதனை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
சின்னாளபட்டி பேரூராட்சிக்கு அதிக நிதி: அமைச்சரைப் பாராட்டிய உறுப்பினர்கள்
சின்னாளபட்டி, செப்.1- சின்னாளபட்டி பேரூராட்சிக்கு அதிக நிதியை ஒதுக்கிக் கொடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமியைப் பாராட்டி சின்னாளபட்டி பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கூட்டத்திற்குத் தலைவர் பீரதீபா தலைமை வகித்தார் செயல் அலுவலர் செல்வராஜ், துணைத்தலைவர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனத் தலைவர் பதில் அளித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ பெரியசாமி சின்னாளபட்டி பேரூராட்சியின் 18 வார்டுகளுக்கும் அதிக நிதியை ஒதுக்கிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார். துப்புரவு ஆய்வாளர் கணேசன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை சரளா உட்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மோடியால் புறக்கணிக்கப்படும் பிஎஸ்என்எல்: வாடிக்கையாளர்கள் தவிப்பு
பழனி, செப்.1- பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் திட்ட மிட்டு பிரதமர் மோடி புறக்கணிப்பதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அவதிக் குள்ளாகின்றனர். அதானியை வாழவைப்ப திலேயே கவனம் செலுத்தும் பிரதமர் லட்சக் கணக்கானோர் பயன்படுத்தும் பிஎஸ்என் எல் நிறுவனத்திற்கு உரிய நிதியோ, போது மான உபகரணங்களோ வழங்குவதில்லை. ஊழியர்கள் தொடர்ந்து போராடி வந்தா லும் கண்டுகொள்ளமாட்டோம் என்ற மனநிலையில் மோடி அரசு உள்ளது. இந்த நிலையில், பழனியில் கடந்த சில வாரங்களாக பிஎஸ்என்எல். சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கைப்பேசிகள் வேலை செய்யும். திடீரென சிக்னல் கிடைக்காமல் போய்விடுகிறது.. வியாழனன்று காலை பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேவை கடுமையா கப் பாதிக்கப்பட்டது. மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மூதாட்டி தற்கொலை
மதுரை, செப்.1- மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்த வர் ஜெயலட்சுமி 80. இவருடைய பேரன் கடந்த ஒரு வரு டத்திற்கு முன்பு தற்கொலை செய்து செய்து கொண்டார். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த மூதாட்டி ஜெயலட்சுமி, வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் கருகிய நிலையில் மூதாட்டியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
தேனி, செப்.1- போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை இரண்டாம் கட்ட சொற்பொழிவு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை வகித்தார். ‘தென்மேற்கு பருவக்காற்றும் தீந்தமிழ் வீச்சும்’ என்னும் தலைப்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் முனைவர் நர்த்தகி நடராஜ் சிறப்புரையாற்றினார். பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு மற்றும் சிறப்பான கேள்வி கேட்ட கேள்வி நாயகன், கேள்வி நாயகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தங்களை பரிசாக மாவட்ட ஆட்சியர், நர்த்தகி நடராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்வின் போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பால்பாண்டி, போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் வசந்தநாயகி மற்றும் கல்லூரிகளில் பயிலுகின்ற 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
லாட்டரி விற்றவர் கைது
மதுரை, செப்.1- மதுரை பழைய மீனாட்சி நகர் அழகு பழனி தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன் 55. இவர் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு ரோந்து சென்ற தெப்பக்குளம் காவல்துறையினர் அவரிடமிருந்து, லாட்டரிகள், ரூ.4570 பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.
அனைத்து பேட்டரி வாகனங்களும் பழுது நீக்கி இயக்கப்படும்: மதுரை மாநகராட்சி
மதுரை, செப்.1- மதுரை மாநகராட்சியில் பழு தாகியுள்ள வாகனங்களை சரி செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மதுரை சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். மனுவில், மதுரை மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப் படுவதற்கு முன்பு மொத்தம் 72 வார்டுகள் இருந்தன கடந்த 2011-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிகளுக்காக பேட்டரி மூலம் இயங்கும் 509 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. பேட்டரியில் இயங்கும் ஒரு வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் ஆகும். 509 பேட்டரியில் இயங்கும் வாக னங்களில் 250 வாகனங்களை மாநக ராட்சியால் முழுமையான நிதி கொடுக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 06 லட்சத்து 2 ஆயிரத்திற்கு வாங்கப்பட்டது. மீதமுள்ள 259 வாகனங்கள் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க கையால் இயக்கப்படும் ரிக்சா வண்டிகளை பயன்படுத்து கின்றனர். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் குறித்து விசாரித்த போது, பெரும்பாலான வாக ங்கள் வேலை செய்யும் நிலை யில் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களை பெற்றதில், பேட்டரியில் இயங்கும் 509 வாகனங்களில், 257 வாகனங்கள் பழுதடைந்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை சரி செய்ய ரூ.4 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரம் செலவாகும். எனவே பழுதாகியுள்ள வாக னங்களை சரிசெய்யவும், 509 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 5 மண்டலங்களிலும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு ஒரு பராமரிப்பு பிரிவு அமைக்க வேண்டும், ஒவ்வொரு பகுதி யிலும் குப்பைகளை சேகரிக்க போதிய அளவில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபது சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி குமரப் பன் அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் உள்ள 509 பேட்டரி வாகனங்களில் தற்போது 49 பேட்டரி வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் இயங்கு ின்றன. தற்போது இயங்காத 49 வாகனங்களிலும் பேட்டரி பழுதாகி உள்ளது. எனவே, விரைவில் அனைத்து பேட்டரி வாகனங்களும் இயங்கும், மேலும், தரமற்ற பேட்டரிகளை வழங்கிய ஒப்பந்தத்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தர விட்டனர்.
பெண் உறுப்பினருக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி கைது
மதுரை, செசுப்.1- மதுரை மாவட்டம் மேல வடக்கூர் கிரா மத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவ ரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மதுரை மாவட்டம் களி மங்கலம் அருகே உள்ள குன்னத்தூரைச் சேர்ந்த மதுரை மாவட்ட பாஜக விவசாய அணி நிர்வாகியான அழகுமாரி பாண்டி யன்(48) என்பவரோடு கட்சி ரீதியான நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்ணுக்கும், கண வருக்கும் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டை குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்து வைத்த நிலை யில், அந்த பெண் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். ஆனால், பாஜக நிர்வாகி அழகுமாரி பாண்டியன், அந்தப் பெண்ணை கணவ ரோடு சேர்ந்து வாழக்கூடாது என்று கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த தால் அழகுமாரி பாண்டியன் ஆத்திரம டைந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில், சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாஜக நிர்வாகி அழகுமாரி பாண்டியனை கைது செய்தனர்.
பாதாள சாக்கடை திட்ட குளறுபடிகளை சரி செய்க!
திண்டுக்கல் மாமன்றத்தில் சிபிஎம் வலியுறுத்தல்
திண்டுக்கல், செப்.1- திண்டுக்கல் மாநகராட்சி யில் பாதாள சாக்கடை திட்ட செயல்பாட்டில் நடை பெறும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். திண்டுக்கல் மாமன்ற கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாமன்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமை வகித்தார். துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் கே.எஸ்.கணே சன் பேசுகையில், ‘‘பாதாள சாக்கடைப் பணிகள் குளறு படிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் பணம் செலுத்தியும் பாதாள சாக்கடை நிறைவேற்றப்ப டாமல் உள்ளது. எனவே பணம் கட்டிய வர்கள் குடியிருப்புகளுக்கு உடனடியாக பாதாள சாக்க டை இணைப்பு வழங்க வேண்டும். மேலும் மாநக ராட்சி பகுதியில் நாய்கள், மாடுகள் பிரச்சனை அதிக மாக உள்ளது’’ என்றார். இதற்கு நடவடிக்கை எடுப்ப தாக மேயர் உறுதியளித்தார். சிபிஎம் கவுன்சிலர் மாரி யம்மாள் பேசுகையில், ‘‘அபிராமி அம்மன் கோவில் சுற்றி வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. அப்படி நடக்கும் போது சாலை யோர வியாபாரிகள் பாதிக்கப்படாத வண்ணம் அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு வேலை துவங்க வேண் டும்’’ என்றார். இக்கூட்டத் தில் சிபிஎம் கவுன்சிலர் ஜோதிபாசு, திமுக, கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.