மேட்டுப்பாளையம், டிச.17- மேட்டுப்பாளையத்தில் ஏற்றி வைத்த விளக்கு சரிந்து ஏற்பட்ட தீ விபத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எல்.எஸ்.புரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் துளசி அம்மாள். இவர் அருகி லுள்ள தனியார் பேப்பர் கடையில் பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், வெள்ளியன்று துளசி அம் மாள் தனது வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்து விட்டு, வீட்டை பூட்டி கொண்டு பணிக்கு சென்று விட்டார். இதனிடையே மதியம் 12 மணியளவில் அவரது ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண் டதும் அருகில் இருந்த வர்கள் மேட்டுப்பாளையம் காவல் துறை மற்றும் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தீ பரவாமல் இருக்க தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரை நெருப்பு எரிந்து கொண்டிருந்த வீட்டின் மீது ஊற்ற துவங் கினர். ஆனால், தீ கட்டுக் கடங்காமல் கரும்புகை யுடன் எரியத் தொடங்கியது. அதற்குள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீய ணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். ஆனால், அதற்குள் வீட்டுக்குள் இருந்த பல பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. மேலும், வீட்டினுள் தீ பிடித்த போது அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் உடனடியாக அப் புறப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.