காலமானார்
சிவகங்கை, டிச.24- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பைச் சேர்ந்த ஜெக தம்மாள் என்பவர் டிசம்பர் 24 சனிக்கிழமையன்று கால மானார். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலை ஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தனின் தாயார் ஆவார். அவரது மறைவுச் செய்தியறிந்து தமுஎகச அமைப்பினர், கட்சியினர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி னர். இறுதி நிகழ்ச்சி டிசம்பர் 25 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தனியார் பைனான்சில் கடன் பெற்று தவணை செலுத்தாதவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
விருதுநகர், டிச.24- விருதுநகரில் தனியார் பைனான்சில் கடன் பெற்று மாதத் தவணையை செலுத்தாதவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் ராமன் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் என்ப வரது மகன் சோலைராஜ்(35). தனியார் காகித நிறு வனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பஜாஜ் பைனான்சில் சோலைராஜ் ரூ.60ஆயிரம் கடன் பெற்றா ராம். இதற்கு மாதத் தவணையாக ரூ.2,368 செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில், டிசம்பர் மாதத்திற்கான தவணைத் தொகையை சோலைராஜ் செலுத்தவில்லை யாம். எனவே, பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், சோலை ராஜை தொடர்பு கொண்டு தரக்குறைவான வார்த்தை களால் பேசியதோடு, அல்லம்பட்டி முக்கு ரோடு பகு திக்கு வரச்சொல்லி மிரட்டினார்களாம். இதையடுத்து அங்கு சென்ற சோலைராஜை பைனான்ஸ் நிறுவன ஊழி யர் சிவா மற்றும் சிலர், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோலைராஜ், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன.6 இராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை
இராமநாதபுரம்,டிச.24- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடை பெறுவதை முன்னிட்டு 06.01.2023 அன்று வெள்ளிக் கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழு வதும் ‘உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.01.2023 அன்று சனிக்கிழமை வேலைநாளாக வும் அறிவிக்கப்படுகிறது. மேலும் இராமநாதபுரம் மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 21.01.2023 அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட் டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 6.1. 2023 வெள்ளிக்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற் கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருமணமான 3 மாதத்தில் வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
தேனி, டிச.23- மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரிய தர்ஷினி.இவருக்கும் தேனி அருகே ஆதிபட்டியை சேர்ந்த கார்த்திகேயனுக்கு கடந்த 9.9.2022 ஆம் தேதி திருமணம் நடத்துள்ளது .திருமணமானவுடன் மனைவியை தான் வேலை பார்க்கும் சிங்கப்பூருக்கு அழைத்து செல்வதாக மணமகன் வாக்குறுதி அளித்துள்ளார் .எனினும் விசா கிடைக்கவில்லை என கூறி மணமகன் சிங்கப்பூர் சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த போது மணமகன் வீட்டார் கூடுதலாக ரூ 2 லட்சம் மற்றும் நகைகளை வர தட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார் .அதன் பேரில் கணவர் கார்த்தி கேயன், அவரது தந்தை மலைச்சாமி,தாயார் பாக்கிய லட்சமி, சகோதரி கெளசல்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து தடுப்பு விளக்கு பொருத்த கோரிக்கை
திருவில்லிபுத்தூர், டிச.24- மதுரை செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் திருவில்லி புத்தூர் ஆண்டாள் திரை யரங்கம் வளைவில் இதுவரை 3 கனரக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இங்குள்ள தடுப்புச்சுவரின் தென்பகுதி முனையில் சிவப்பு விளக்கு பலகை பொருத்தப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை அன்று இரவு 1 மணியளவில் கேரளா அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை போர்க்கால அடிப்படையில் உடனடியாக விபத்து தடுப்பு விளக்கு பொருத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதாரச் சீர்கேடாக மதுரை ரயில்வே நிலைய நுழைவு வாயில்
மதுரை, டிச. 23- மதுரை மாநகரின் மைய பகுதியான ரயில்வே நிலையத்தின் நுழைவு வாயிலில் இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதி சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி, ரயில்வே நிலையத்திற்கு முன் பகுதியில் பெரும் அசுத்தமாகவும் சுகா தாரச் சீர்கேடாகவும் உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கட்டிட கழிவுகளை அவ்விடத்தில் இருந்து அகற்றி,சுத்தப்படுத்த வேண்டும். அவ்விடத்தில் கழிப்பறை அமைப்பதற்கோ அல்லது சாலை யோர பூங்கா அமைப்பதற்கோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஜல்லிக்கற்களை ஏற்றிய லாரி மோதியதில் மாணவியின் கால் முறிந்துபோனது
கிராம மக்கள் மறியல்- கல்குவாரி கிரசருக்கு சீல்வைப்பு
காரியாபட்டி, டிச.24- காரியாபட்டி அருகே இரு சக்கர வாக னத்தில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீது ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மாணவி யின் கால் முறிந்துபோனது. இதனால், பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்ட தைத் தொடர்ந்து கல்குவாரிக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளது கீழஉப்பிலிகுண்டு கிரா மம். இப்பகுதியைச் சேர்ந்த ஆதிநாராய ணன் மகன் வர்கீஸ் நவீன் (16), லட்சுமணன் மகள் லாவண்யா (15). இவர்கள் இருவ ரும், ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளி செல்வதற்காக ஆவியூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழி யே, ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத் தின் மீது மோதியது. இதில், மாணவியின் கால் முறிந்து போனது. இதனால் ஆவேசமடைந்த கீழ உப்பி லிக்குண்டு கிராமத்தினர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கிரசரை உடனடியாக மூடக்கோரி, மதுரை- தூத்துக்குடி 4 வழிச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காரியா பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக் கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் காரட் கரூன் உத்தராவ், ஆகியோர் சமா தானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் கல்குவாரி கிரசர் மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததோடு, அதை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.