districts

img

காரியாபட்டியில் ரூ.56.30 லட்சத்தில் 5 புதிய அங்கன்வாடி மையங்கள் நிதியமைச்சர் திறந்துவைத்தார்

காரியாபட்டி, ஜூலை 17- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் ரூ.56.30 இலட்சம் மதிப்பிலான 5 புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமையில் தமிழக நிதி -மனித வள  மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.  பின்பு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 33 பயனாளி களுக்கு ரூ.69.30 லட்சம் மதிப்பில் வீடுகள்  கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், உதவி செயற்பொறியாளர்(பொ) இசக்கி, காரியாபட்டி செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.