districts

img

குமரியில் 36 முதல்வர் மருந்தகங்கள் திறக்க ஏற்பாடு : ஆட்சியர் ஆய்வு

நாகர்கோவில், பிப்.19- கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார்விளை, கிருஷ்ணன்கோவில், வெள்ளிகோடு ஆகிய முதல்வர் மருந்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், பொ துப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் நேர்வில் தொழில் முனைவோர்கள் மருந்தாளு நர்களுக்கு ரூ.3 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு மானியத்தொகையாக ரூ.2 இலட்சம் வழங்கப்படுகிறது. அதில் 50 சதவிகிதம்  உட் கட்டமைப்பு வசதிக்கும், 50 சதவிகிதம் மருந்து களாகவும் வழங்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட  கிருஷ்ணன் கோவில் வாத்தியார் விளை, தக்கலை வட்டாரத்துக்குட்பட்ட வெள்ளிகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்த கத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, பணிகளின் நிலைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்ட றியப்பட்டது. மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் அமைந்துள்ள கல்குளம் - விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருந்து பொருட்களின் இருப்புகள் குறித்து துறை அலு வலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவினை முன்னிட்டு மாவட்டத்திற்குட்பட்ட 36 முதல்வர் மருந்தகத்திற் கும் தேவையான மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வழங்கியது குறித்து உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.