விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 232.70 மி.மீ மழை
விருதுநகர், மே 9- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 232.70 மி.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக விருதுநகரில் 73 மி.மீ, பிள வக்கல் 33.20, கோவிலாங்குளம் 22.30, திருச்சுழி 17.20, அருப்புக்கோட்டை 16.60, வெம்பக்கோட்டை 15.20, வத்தி ராயிருப்பு 14, சிவகாசி 10,சாத்தூர் 9.40, இராஜபாளையம் 8, காரியாபட்டியில் குறைந்தபட்சமாக 2.20 மி.மீ என மொத்தம் 232.70 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகி யுள்ளது. இதன் மொத்த சராசரி 19.39 மி.மீ ஆகும்.
99 சதவீதம் தேர்ச்சிபெற்ற அல்அமீன் பள்ளி
மதுரை, மே 9- பிளஸ்-2 அரசுப் பொதுத் தேர்வில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99.13 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் முகமது உசேன் என்ற மாணவன் முதலிட மும், முகமது முத்தகீன் இரண்டாமிமும், கஜேந்திரன் மூன்றாமிடமும் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளா ளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கமுதி சத்ரிய நாடார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
இராமநாதபுரம்,மே 9- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்ரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அருண் கார்த்திக் 540 மதிப்பெண்கள், ரூபன் கார்த்திக் 556 மதிப்பெண்கள், அபிஸ் கணேஷ் 493 மதிப்பெண்கள் மற்றும் சுவாதி 568 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி தெரி வித்துள்ளார்.
மே 10, 11 இல் காவேரி குடிநீர் விநியோகம் இல்லை இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம், மே 9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது: இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் (காவேரி), தலைமை யிடத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக மின்விநி யோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் ரயில் நிலையம் அருகில் கீழக்கரை இரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிக்காக இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் (600அஅ) மாற்றி அமைக்கப்பட உள்ளதால் இராமநாத புரம், கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி, இராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், நயினார்கோவில் மற்றும் போகலூர் ஒன்றிய ஊரக குடியிருப்புகளுக்கு மே 10, மற்றும் மே 11 ஆகிய இரு தினங்கள் காவேரி குடிநீர் விநியோகம் இருக் காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா மே 16 வரை பேருந்து, பிற வாகனங்களின் வழித்தடம் மாற்றம்
காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு தேனி, மே 9- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா வை முன்னிட்டு மே 9 முதல் 16 ஆம் தேதி வரை பேருந்து மற்றும் பிற வாகனங்களின் வழித்தடம் மாற்றம் செய் யப்பட்டுள்ளது என்று தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி பகுதி யில் உள்ள ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா மே 9 முதல் 16 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடை பெற்று வருகிறது. இவ்விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தர உள்ளதால், வீர பாண்டி வழியாக செல்லும் பேருந்து மற்றும் போக்கு வரத்து வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, வீரபாண்டி வழியாக கம்பம் மற்றும் குமுளி வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள், உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர்;, சின்ன மனூர் வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கம்பம் முதல் தேனி வரை வரும் அனைத்து வாகனங்களும் உப்பார்பட்டி விலக்கு வழியாக தப்புக்குண்டு, தாடிச்சேரி, அரண்மனைப்புதூர் வழி யாக தேனி வந்தடையும் என பொதுமக்களுக்கு தெரி வித்துக் கொள்ளப்படுகிறது என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீண் உமேஷ் தெரி வித்துள்ளார்.
வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
மதுரை, மே 9- வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் மே 9 செவ்வாயன்று சோதனை யில் ஈடுபட்டனர். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டு களாக முறையான வருமான வரி செலுத்த வில்லை என புகார் எழுந்தது.இந்த புகா ரின் அடிப்படையில் செவ்வாயன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை சொக்கிக்குளம் பகுதியில் உள்ள வடமலையான் மருத்துவமனை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதிலும் வடமலை யான் மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தகங்களின் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அங்கு நகர் பகுதியில் உள்ள வடமலையான் மருத்துவ மனை ஆகிய இடங்களில் சோதனை நடத்தி னர். வருமானம் குறித்தும் விசாரணை மேற் கொண்டனர். நிர்வாக அலுவலகங்களில் மட்டுமே சோதனை நடைபெற்று வரக்கூடிய நிலை யில் மருத்துவமனைகளில் நோயாளிகள் வந்து செல்வதற்கு எந்தவித இடையூறும் இன்றி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி ஒளிபரப்பு
மதுரை, மே 9- மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித் திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் கடந்த மாதத்திற் கான உண்டியல் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த பணிகள் கோவில் இணையதளத்தில் யூ டியூப் மூல மாக நேரலை செய்யப்பட்டுள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்கா ணிப்பாளர்கள் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், மதுரை தெற்கு வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் என 250க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண் டுள்ளனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் கோவில் துணைஆணையர் அருணாசலம் முன்னி லையில் செவ்வாயன்று மீனாட்சியம்மன் கோவில் மற்றும் 10 உபகோயில்களின் உண் டியல் திறப்பு நடைபெற்றது. இதன் முதல் எண்ணிக்கை முடியும் வரை கோவில் இணையதள பக்கத்தில் நேரலை செய் யப்பட்டு வருகிறது. மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம் மன் கோயில் மற்றும் முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திரு வாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில் உட்பட 10 உபகோயில் உண்டியல் திறக் கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.
சாலை விபத்தில் அரசுக் கல்லூரி மாணவர் பலி
சிவகாசி, மே 9- சிவகாசியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசுக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த வர் ஆகாஷ் (20). சிவகாசி அரசு கலை கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சிவகாசி-திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, திடீரென சலை யின் குறுக்கே மாடு சென்றுள்ளது. அதன் மீது மோதி யதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
விருதுநகர்: நீதிபதி பதவியேற்பு
திருவில்லிபுத்தூர், மே 9- விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திலகம் பதவியேற்றுக் கொண்டார். திருவில்லி புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த கிறிஸ்டோபர் அரி யலூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த மாதம் 28ஆம் தேதி நியமிக்கப் பட்டார். அதேபோல்,திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் நியமிக்கப்பட்டார் இந்நிலையில்,திங்கள்கிழமைதிரு வில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதி பதி திலகம் பதவியேற்று கொண்டார்.
பார்வையற்றோர் பெண்கள் பள்ளி பிளஸ்-2 தேர்வில் சாதனை
திருச்சிராப்பள்ளி, மே 9- திருச்சிராப்பள்ளி புதூ ரில் உள்ள பார்வையற்ற பெண்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் பிளஸ்-2 தேர்வில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பார்வை யற்றோருக்காக மாநிலத்தில் இயங்கி வரும் மூன்று பள்ளிகளில் ஒன்று இப்பள்ளி. கடந்த ஐந்தாண்டு களாக பிளஸ்- 2 தேர்வில் தொடர்ந்து சாதித்து வரு கிறது. இந்தாண்டு தேர்வெ ழுதிய 17 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி தலைமையாசிரி யர் வி.சுப்பிரமணியன் கூறு கையில், பள்ளி மாணவர் களுக்கு தரமான கல்வி அளிக்கப்படுகிறது. மாண வர்கள் அரசு வழங்கும் கணி னிகள், பிரெய்லி மற்றும் ஆடியோ ரெக்கார்டர்க ளைப் பயன்படுத்துகின்ற னர். ஆசிரியர்களும் சிறப் பான முறையில் அவர்களுக் குக் கற்றுக்கொடுத்தனர். பள்ளிக் கல்வித் துறை வழங்கும் தொழில் வழி காட்டுதல் திட்டத்தில் அனைத்து மாணவிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் சென்னையில் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க வும் திட்டமிட்டுள்ளனர்” என்றார். தேர்வெழுதிய 17 மாண வர்களில் ஆர்.ஆர்த்தி 600க்கு 549 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலி டம் பெற்றுள்ளார். புவியியல் பாடத்தில் 100-க்கு 100 பெற் றுள்ளார். ஆர்த்தி தனது வெற்றியை தனது பெற் றோர் மற்றும் ஆசிரியர் களுக்கு அர்ப்பணித்தார். அவர் கூறுகையில் “எனக்கு மிகவும் ஆதரவாக பெற்றோ ரும் ஆசிரியர்களும் இருந்த னர். எந்த அழுத்தமும் இல் லாமல் படிக்க எனக்கு உத வினார்கள்” என்றார். பி.ஏ. எல்.எல்.பி. படிக்க விரும்புவ தாகக் தெரிவித்தார். 467 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத் தைப் பெற்றுள்ள ஆர். கீர்த்தனா, ஆசிரியர்கள் நன் றாகக் கற்றுக் கொடுத்தனர். கற்றறிந்தவற்றை குழுவாக விவாதிப்போம் என்றார். குழு விவாதம் எனது வெற் றிக்குக் காரணம் என்கிறார். கீர்த்தனா பி.ஏ. இலக்கியம் (ஆங்கிலம்) படிக்க விரும்பு வதாகக் கூறினார். ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 95 மாண விகள் படிக்கும் இப்பள்ளி யில் 23 பணியிடங்கள் காலி யாக உள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆறு பாடங்களைக் கற்றுக் கொடுக்க மூன்று ஆசிரி யர்கள் மட்டுமே உள்ள னர். மேலும் போதுமான ஆசி ரியர்களை நியமிக்க வேண்டு மென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டில் கூடு தல் ஆசிரியர்கள் கிடைப்பார் கள் என்று நம்பிக்கையோடு உள்ளனர் சக ஆசிரியர்கள்.
கும்பகோணம் பகுதியில் தொடர் மழை: பருத்தி பயிர்களை சூழ்ந்த தண்ணீர்
கும்பகோணம், மே 9- கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழை யால் பருத்தி பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் இந்தாண்டு அதிகபட்ச விலை கிடைக்குமா என விவ சாயிகள் கவலையடைந்து உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமா ளிக்க வசதியாக பருத்தி செடிகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் பருத்தி விதை களை விதைத்து ஜூன் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் பருத்தி அறுவடை செய்வது வழக்கம். இந்த நிலையில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் சுற்று வட்டார பகுதியில் பரவலாக பெய்து வரு கிறது. கும்பகோணம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகு படி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகள் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால் பருத்திச் செடிகள் அழுகி மொட்டுகள் உதிர்ந்து, பூச்சிகளால் நோய்கள் ஏற்பட்டு பருத்தி மகசூல் பாதிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. இதனால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், “ கடந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்த தால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 50 சதவீதத்துக்கு அதிகமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழையால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்த ஆண்டு அதிகபட்ச விலை பருத்திக்கு கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள் ளோம்” என்றனர். தவிர கும்பகோணம் பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் அறுவடை முடிந்து ஒரு சில விவசாயிகள் கோடை நடவாக குறு கிய கால நெற்பயிர்களை சாகுபடி செய் துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிடுதல் வேண்டும் இராமநாதபுரம் ஆட்சியர் வேண்டுகோள்
இராமநாதபுரம், மே 9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.05.2023) ஊரக வளர்ச்சி துறையின் மூலம் இராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 53 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையேற்று ஊராட்சி மன்ற தலைவர்களுடன் குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து கருத்துக்கள் வழங்கி பேசியதாவது: பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதியளவு தண்ணீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வழங்க இயலாத சூழ்நிலை தற்பொழுது உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கூட்டத்தின் நோக்கம் ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான அளவு தண்ணீர் கிடைத்திட தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இதற்குண்டான பதில்கள் பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. இப்பணிகளை 2024-ஆம் ஆண்டிற்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டமிட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள நிலையை சரியாக மதிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வருங்கால சந்ததியினருக்கு தடையின்றி குடி தண்ணீர் கிடைத்திட உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.