districts

2 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி

சென்னை,ஜன.4- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ள  நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பரிசோதனை செய்துகொண்ட பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருவரும் மருத்துவ பரிசோத னைக்கு பிறகு, தனிமைப்படுத்திக் கொண்டனர்.