districts

மோடி ஆட்சியில் 12.5 கோடி பேர் வேலையிழப்பு : கே.எஸ்.அழகிரி

சென்னை, மே 29-  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வேலையை இழந்த னர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்த லில் பாஜகவின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி 8 ஆண்டு களை நிறைவு செய்கிறார். மோடி ஆட்சி யில் ரூபாய் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கி மோசடிகள் நிகழ்ந்துள் ளன. இதில், ரூபாய் 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிவிட்டு 23 பேர் வெளிநாடு களுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.  ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று 2014 தேர்தலில் மோடி பரப்புரையில் வாக்குறுதி கூறினார். கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு வேலை யில்லாத் திண்டாட்டம் 7.9 விழுக்காடு சரிந்து விட்டது. கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வேலைவாய்ப்பு பறிக் கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளா தாரக் கண்காணிப்பு மைய அறிக்கை யின்படி, அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழக அறிக்கையின்படி, கிராமப்பு றத்தில் 57 விழுக்காடும், நகர்ப்புறத்தில் 80 விழுக்காடு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். உதார ணத்திற்கு ரயில்வே துறையில் 90 ஆயிரம் கேங்மேன், ஸ்விட்ச்மேன் போன்ற வேலைகளுக்கு 2 கோடியே 80 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதையே மோடி ஆட்சி உறுதி செய்கிறது. எனவே, பா.ஜ.க. வின் ஆட்சி என்பது எண்ணிலடங்காத அவலங்களையும், துன்பங்களையும் கொண்டதாகவே இருந்து வருகிறது. மதவாத வெறுப்பு பேச்சுகளின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தும் பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.