விருதுநகர் மாவட்டத்தில் 119.30 மி.மீ மழை
விருதுநகர், மே 3- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மே 2 ஆம் தேதியன்று ஒரே நாளில் 119.30 மி.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகி யுள்ளது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்க ளாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அளவு விப ரம் வருமாறு: அதிகபட்சமாக சிவகாசியில் 31 மி.மீட்ட ரும், விருதுநகர் 27.20, இராஜபாளையம் 18, வெம்பக் கோட்டை 14.80, சாத்தூர் 12, கோவிலாங்குளம் 4.60, வத் றாப், காரியாபட்டி தலா 2.80 மி.மீ, திருச்சுழியில் குறைந்த பட்சமாக 2.10 மி.மீ என மொத்தம் 119.30 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் மொத்த சராசரி 9.94 மி.மீ ஆகும்.
தடையின்றி குடிநீர் விநியோகம் இன்று ஊராட்சி தலைவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
இராமநாதபுரம், மே 3- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்த தாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றி யங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய வாரியாக வும், ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மே 4 அன்று கமுதி ஊராட்சி ஒன்றியத்தில், வளையப்பூக்குளம் சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக வருகின்ற வறட்சி காலங்களை கருத்தில் கொண்டு தண்ணீர் தடை யின்றி பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்படு கின்றன. மேலும் இக்கூட்டத்தில் நிலத்தடிநீர், மேற்பரப்புநீர், மழைநீர், கழிவுநீர், குடிநீர் விநியோகிக்கும் முறைகள், காவிரி குடிநீர், உள்ளூர் குடிநீர் ஆதாரம், குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம், தனியார் டேங்கர்கள் மூலம் குடிநீர் விநி யோகம் ஆகியவை குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக் களுக்கு குடிநீர் விநியோகிப்பதை உறுதிப்படுத்தப்படும். எனவே மக்கள் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் கணவர், மாமியார் மீது வழக்கு பதிவு
தேனி, மே 3- திருமணமாகி 5 மாதத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் ,மாமியார் மீது தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி பழனிசெட்டிபட்டி அண்ணா தெருவை சேர்ந்த வர் மனோகரன் மகள் கிருபா (24) .இவருக்கும் கோடாங்கி பட்டியை சேர்ந்த ஞானேஸ்வரன் மகன் சரவணகுமார் (31) என்பவருக்கும் கடந்த 5.12.2022 ஆம் தேதி திரு மணம் நடைபெற்றது. திருமணம் செய்த நாள் முதல் கூடுதல் நகை கேட்டு, அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கிருபா தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சரவணகுமார், அவரது தாயார் முத்து லட்சுமி ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் மலரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
ஆண்டிபட்டி, வருசநாட்டிலிருத்து கோவை, திருப்பூருக்கு அரசு பேருந்து வசதி செய்திடுக!
தேனி, மே 3- ஆண்டிபட்டி, வருச நாட்டிலிருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட நக ரங்களுக்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து முதலமச்ச ருக்கு கட்சியின் தேனி மாவட் டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலா டும்பாறை ஒன்றியங்கள் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகும். இந்த பகுதியில் விவசாயம், கால் நடை வளர்ப்பு மட்டுமே முக் கிய தொழிலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கடும் வறட்சி காரண மாக பெரும்பாலான விவ சாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி கோவை, திருப்பூர் மாவட்டங்க ளுக்குச் சென்று கூலி தொழி லாளிகளாக பணியாற்றி வரு கிறார்கள். ஆண்டிப்பட்டி யில் இருந்து நேரடியாக திருப்பூர் மற்றும் கோவைக்கு எந்த பேருந்தும் இதுவரை இல்லை. நாங்கள் தேனி வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. திருப்பூர், கோவை செல்ல ஆண்டி பட்டியில் இருந்து தேனிக்கு வந்து பெரியகுளம், தேவ தானப்பட்டி வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுமார் 40 கிலோ மீட்டருக்கு மேல் தேவையில்லாமல் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம் ஏற் படுவதோடு கூடுதல் கட்ட ணம் வேறு செலுத்த வேண்டி யுள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து தேவதானப்பட்டி வழியாக சென்றால் வெறும் 17 கிலோமீட்டர் தூரம் மட் டுமே, தேவையான சாலை வசதியும் உள்ளது. அது போல க .மயிலாடும்பாறை ஒன்றியத்தில் இதே நிலைமை தான். எனவே ஆண்டிப்பட்டி மற்றும் வருசநாடு ஆகிய ஊர்களிலிருந்து கோவை, திருப்பூருக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக பெரியகுளம் வழியாக செல்லும் சில பேருந்துகளை ஆண்டிபட்டி மார்க்கமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 விடுமுறை வழங்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
உதவி ஆணையர் தகவல்
உதவி ஆணையர் தகவல் விருதுநகர், மே 3- விருதுநகர் மாவட்டத்தில் மே 1 தொழி லாளர் தினத்தன்று விடுமுறை வழங்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடு முறை தினங்கள்) சட்டத்தின்படி தொழிலா ளர் தினத்தன்று கடைகள் மற்றும் நிறு வனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்கப்படாமல் ஊழி யர்கள் வேலை செய்ய அனுமதித்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல் லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு தர வேண்டும். இந்தநிலையில், தேசிய விடு முறை தினமான தொழிலாளர் தினத்தன்று (மே-1) விருதுநகர் மாவட்டத்தில் கூட் டாய்வு செய்யப்பட்டது. அப்போது, சட்ட விதிகளை அனுச ரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழி லாளர்களை பணிக்கு அமர்த்திய 45 கடை கள் மற்றும் நிறுவனங்கள், 21 உணவ கங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவ னங்கள் என மொத்தம் 68 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் தினத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்க ளும் வழங்க வேண்டும். இந்த சட்டத்தை மீறு பவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை தொழிலாளர் இணை ஆணை யர் மூலம் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக் கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.