மதுரை,ஏப்.7- எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி சாகித்ய அகாடமி விருதுபெற்ற காவல்கோட்டம் நாவல் குறித்த கதை சொல்லும் நிகழ்வு மதுரை வாசகர் வட்டத்தின் சார்பில் புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அமைப்பாளர் பி.சண்முகவேலு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜி.ராமமூர்த்தி வரவேற்றார். முனைவர் கிருஷ்ணன் கதை சொல்லி உரையாற்றி னார். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ஷே.ஷேக் நபி ,முனைவர் சு.கிருஷ்ணனனுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். ஆசிரியர் தமிழ்க்கும ரன் நன்றி கூறினார்.