மதுரை, பிப். 25- மதுரை நம்பி எழுதிய ‘‘சிறை யில் ஒளிரும் நட்சத்திரங்கள்’’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வியாழனன்று ஞானஒளிவுபுரம் லயோலா தொழில்நுட்பக் கல்லூரி வளாக அரங்கில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா தலைமையில் நடைபெற்றது. இதில், பூ.பாண்டிய முத்துக் குமார் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் அ.ந. சாந்தாராம் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் ஆர்.பிரபாகர், தமுஎகச கவுரவத் தலைவர் எழுத் தாளர் ச.தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிஞர் கே.பால பாரதி, தமுஎகச மாநிலத் தலை வர் (பொறுப்பு) மதுக்கூர் இராம லிங்கம் ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். நூல் ஆசிரியர் எழுத்தாளர் மதுரை நம்பி ஏற் புரையாற்றினார். கவிஞர் வெண் புறா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறைச்சாலையில் இடது சிந்த னையோடு பல்வேறு சீர்திருத்தங் கள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுத் தந்த ஆயுள் சிறைக்கைதிகளாக இருந்து விடுதலை பெற்று இன்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இருந்து செயல் படும் நூலின் கதாப்பத்திரங்க ளாக வரும் தீக்கதிர் காவலர் கணேசன், முனிச்சாலை பகுதி புரட்சி மணி, மீனாம்பாள்புரம் டான்யா ராஜேந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கவி நௌசத் நன்றி கூறினார்.