புதுச்சேரி, மார்ச் 6- வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச் சர் நாராயணசாமி தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் வதந்தியை பரப்பும் கட்சியாக பாஜக செயல்படுகிறது. சமூக வலை தளங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பரப்புரை செய்கிறது. ஆனால் அது தவறான பரப்புரை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை அந்த மாநில முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு அளித்துள் ளது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பொறுப்புள்ள கட்சித்தலைவர் பேசியுள்ளது வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதி யாகியுள்ளது. பொய்யை மூலதன மாக கொண்டு செயல்படும் பாஜக விற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள். ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்துகின்றனர். ஆனால், இன்னும் ஆளுநர்களும் துணை நிலை ஆளுநர்களும் திருந்த வில்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் ஆளுநர்கள் தலையி டவோ தடைபோடவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தெலுங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்த முடியுமா என சவால் விட்டேன், அதற்கு பதில் இல்லை. ஆனால் தெம்பு இல்லாத புதுச்சேரி ஆட்சியில்தான் துணைநிலை ஆளுநர்கள் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த முடியும். தனது அதிகாரத் தில் ஆளுநர் தலையிடுகிறார் என்பதை கூட கண்டுகொள் ளாமல், முதலமைச்சர் நாற்காலி மட்டும் போதும் என்பதற்காக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து டம்மி முதல்வராக ரங்கசாமி செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.