districts

img

சண்டே மார்க்கெட்டை மாற்ற எதிர்ப்பு

புதுச்சேரி, மார்ச் 16- புதுச்சேரியின் பாரம்பரியமிக்க சண்டே மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று  சிஐடியு மாநாடு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி சண்டே மார்க்கெட் சிஐடியு மாநாட்டிற்கு சங்கத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னதாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் மூர்த்தி கொடி ஏற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்தார். சிஐடியு பிரதேச தலைவர் முருகன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபுராஜ், சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அழகர்ராஜ், பொதுச்செய லாளர் வடிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சங்க செய லாளர் அன்பழகன் வேலை அறிக்கை யையும், பொருளாளர் ஸ்டெல்லா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். முன்னதாக காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. புதுச்சேரியில் சுற்று லாத் தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் பாரம்பரியமிக்க சண்டே மார்க்கெட் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை  ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அப்புறப்படுத்தி, இட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.  சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014இன்படி தற்போது  உள்ள இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500 வழங்க வேண்டும். வங்கிக் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயல் தலைவராக ரவி, தலைவராக சுரேஷ், செயலாளராக விஜி, பொருளாளராக ஸ்டெல்லா உள்ளிட்ட 10 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.