districts

மேலூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.14 - புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் மேலூர். இக்கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும். கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். மயானங்களுக்குச் செல்லும் சாலைகளை தார்ச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும். விவசாய அடிகலம் அமைத்துத் தர வேண்டும். புறம்போக்கில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் ஆர்.லெட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.சலோமி தொடக்கவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் நிறைவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ஜோஷி, டி.ரகுபதி, எம்.நாகராஜன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.ரஞ்சிதா, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.

;