அறந்தாங்கி, ஏப்.21 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த ரெத்தினகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாபெ ரும் இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவு களாக பிரிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு பரிசு தொகையும் கேடயங்களும் வழங்கப்பட்டன. அதேபோல் பெரிய குதிரை பந்தயம் நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற 3 குதிரை களுக்கு பரிசுத் தொகைகள், பரிசுப் பொருள் கள் வழங்கப்பட்டன.