districts

3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

புதுக்கோட்டை, ஏப்.4 - மூன்று வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த இளைஞருக்கு மூன்று ஆண்டு கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.35  ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் ராஜமா ணிக்கம் (28). கூலி வேலை செய்யும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 3 வயது சிறுமியை  தேநீர் வாங்கி தருவதாகக் கூறி தூக்கி  சென்றுள்ளார். பின்னர் ஒரு கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யும்  நோக்கத்தோடு சிறுமியின் ஆடையை கலைந் துள்ளார். அப்போது சிறுமி சத்தமிட்டதை யடுத்து அருகே இருந்தவர்கள் சிறுமியை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிர்  காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து,  ராஜமாணிக்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராஜமாணிக்கம் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னையும், 35,000 ரூபாய் அபராதமும் விதித்து  நீதிபதி சத்யா திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.  ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு  சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப் ்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி  உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜமாணிக் கம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.