districts

img

இடிந்து விழும் நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

பொன்னமராவதி, செப்.7 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஒன்றி யம் தொட்டியம்பட்டி ஊராட்சி காமராஜர் நகரில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முன் னால் அரசால் வழங்கப்பட்ட வீடுகள் உள்ளன. இவை மிகவும் பழுதடைந்த நிலை யில், குடியிருப்பு வாசிகள் மீது ஒவ்வொரு நாளும்  விழுந்த வண்ணம் உள்ளன.  கடந்த 4 தினங்களுக்கு முன்னால் ஆறுமுகம் என்ப வருடைய வீட்டின் சிமெண்ட்  கூரை பெயர்ந்து விழுந்த தில், குடும்பத்தினர் அதிர்ஷ் டவசமாக காயமின்றி தப்பி யுள்ளனர். தற்போது அமிர்தம் மற்றும் அழகி  ஆகியோருக்கு சொந்தமான வீட்டின் சிமெண்ட் கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த பழுத டைந்த, பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ள வீடு கள், எப்போது இடிந்து விழுமோ என தினமும் அச்சத் துடன் வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு, தமிழக அரசு புதிதாக வீடு கள் கட்டித் தர வேண்டு மென கோரிக்கை விடுத்துள் ளனர்.

;