புதுக்கோட்டை, மார்ச் 23 - நூறு நாள் வேலைத் திட்டத்தில் சட்டத் திற்குப் புறம்பாக காலை 7 மணிக்கே வேலைக்கு வர வேண்டும் என நிர்ப்பந்திக் கும் அதிகாரிகளைக் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொரு ளாளர் கே.சண்முகம், மாநிலக்குழு உறுப்பி னர் எம்.சண்முகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.சி. ரெங்கசாமி, தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் பேசினர். தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் விவசாயத் தொழிலா ளர்களை காலை 7 மணிக்கே பணித் தளத்திற்கு வந்துவிட வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்திக்கக் கூடாது. காலை 9 மணிக்கு வரு வதை உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்திற் குப் புறம்பாக வேலை வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். வருடத் திற்கு நூறு நாள்வேலை என்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.