நாகர்கோவில்,பிப்.28- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்திய மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சி நாகர் கோவில் எஸ்.எல்.பி.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழா பிப்ரவரி 27 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ-மாணவி யர்களுக்கும் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா கண்காட்சி நடத்த வேண்டும் என அறி வுறுத்தியதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் பிப்ரவரி 17 முதல் 27 ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடை பெற்றது. இக்கண்காட்சியில் பொது அறிவு, போட்டித்தேர்வுகளை எதிர் கொள்வது, வரலாற்று புத்தகங்கள், இலக்கியங்கள், கவிதை, நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
இந்த அரங்குகளை தினந்தோறும் பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள், இளை ஞர்கள், பொதுமக்கள், புத்தக வாசிப்பாளர்கள் உட்பட பலதரப்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக நம் அனைவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. இதனை மனதில் கொண்டு தமிழ்நாடு அரசு வாசிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற புத்தக கண்காட்சியினை மாநி லத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளி லும் நடத்தி வருகிறது.
அதனடிப் படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியி னை பல்லாயிரம் பேர் பார்வையிட்ட தோடு, சுமார் ரூ.42 இலட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கியுள்ளார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அக்கண்காட்சி அரங்குகளில் புத்த கங்களை காட்சிப்படுத்திய பதிப்பா ளர்கள், ஒவ்வொரு நாளும் சிறப்புரை யாற்றிய பேச்சாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளிகல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவ - மாணவியர்கள், அவர்களை வழி நடத்திய அலுவலர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கிய புத்தகத்தினை மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதி மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் அந்தந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் வாங்கியதை பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பால சுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் பாலதண்டாயுதபாணி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.