நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிக்கென பேட்டரியால் இயங்கும் சிறப்பு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி, விளையாட்டு மற்றும் காலநிலை துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.