கிராமப் புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாத மாக ஊதியம் வழங்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவ தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறுவை சாகுபடி முற்றிலும் பயன் தராத சூழ்நிலையில், கிராமப்புற ஏழை-எளிய மக்கள் நூறு நாள் வேலையில் ஈடுபட்டு, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்நிலை யில், நூறு நாள் வேலையில் பணிபுரிந்த தற்கான கூலியை எதிர்பார்த்து காத்திருந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. நூறு நாள் வேலைக்கான ஊதி யத்தை வழங்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகப்பட்டினம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்கள் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்வேளூர் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபி(எம்)நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். திருக்குவளை ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி. வெங்கட்ரா மன், சிக்கல் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா ஆகி யோர் பங்கேற்றனர்.
செம்பியன்மகாதேவி பஞ்சாப் நேஷனல் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகை யன், நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடி வேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தலைஞாயிறு பேங்க் ஆப் பரோடா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.லதா, திருமருகல் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமரு கல் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பாண்டியன், வாய்மேடு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேதை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். வலிவலம் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், ஒன்றியச் செய லாளர் ஆர்.முத்தையன், கரியாபட்டினம் கனரா வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணியன், வேதை வடக்கு ஒன்றியச் செய லாளர் வெற்றியழகன், பிரதாபராமபுரம் அஞ்ச லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.என்.அம்பி காபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.