districts

img

‘வாசிப்பை வசமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் தேனியில் முதல் புத்தகத் திருவிழா

தேனி ,மார்ச் 3- ‘வாசிப்பை வசமாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்ச் 3 வெள்ளிக்கிழமையன்று தேனியில் முதல் புத்தகத் திருவிழாவை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி தொடங்கி வைத்தார் .  தேனி அருகே பழனிசெட்டி பட்டியில் மேனகா மில் மைதா னத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் புத்தக திருவிழா -2023 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு சுமார் 5 லட்சத்திற் கும் மேலாக புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தொடக்க நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழா விற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஆர். ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷேக் முகை யதீன் வரவேற்று பேசினார். தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புத்தக திருவிழாவை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச் செல்வன் ,சட்டமன்ற உறுப்பினர் கள் ஆ.மகாராஜன் ,கே.எஸ்.சர வணக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். தேனி நகர் மன்ற தலை வர் ரேனுப்பிரியா ,ஒன்றியக்குழு தலைவர் ம.சக்கரவர்த்தி ,முன் னாள் எம்எல்ஏ லட்சுமணன் ,பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர், கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வி துறை சார்பில் பல் வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வரும் 12 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
தினமும் ஒரு விருந்தினர் வைரமுத்து, சு.வெங்கடேசன் பங்கேற்பு 
புத்தக திருவிழாவை முன் னிட்டு தலைசிறந்த எழுத்தாளர் கள், சிறப்பு பேச்சாளர்கள் வர வழைக்கப்பட்டு விழா சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. 4 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் மதுரை முத்து நடுவராக கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. 5 ஆம் தேதி  புத்தக வாசிப்பு கலை என்னும் தலைப்பில் எழுத்தாளர் யாழ்.சு.ராகவன் ,எழுத்தாளர் பாஸ்கர்  சக்தி ஆகியோர் உரையாற்று கின்றனர். 6 ஆம் தேதி -சரிநிகர் சமானமாய் என்னும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றுகிறார். 7 ஆம் தேதி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு கருத்துரை வழங்குகிறார்.தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் நடுவராக கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறுகிறது .8 ஆம் தேதி மகளிர் தின சிறப்பு கருத்துரையாக கவிப்பேரரசு வைரமுத்து,கவிதா ஜவகர் ஆகி யோர் உரையாற்றுகிறார். 9 ஆம்  தேதி தமிழர் பண்பாட்டில் இயற்கை நல் வாழ்வியல் என்னும் தலைப்பில் கி.செல்வகுமார் பேசுகிறார் .10 ஆம் தேதி ம.கவி கருப்பையா நடுவராக கலந்து கொள்ளும் பட்டிமன்ற மும், 11 ஆம் தேதி தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநில வன் கலந்து கொள்ளும் பட்டி மன்றம் நடைபெறுகிறது .
பாரதி புத்தகாலயம் 
தலைசிறந்த கலை , அறிவியல், அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை வரலாறு ,இடது சாரி தத்துவ நூல்கள் கொண்ட பாரதி புத்தகாலயத்திற்கு அரங்கு எண் 19,20 ஒதுக்கப்பட்டுள்ளது.