தேனி, ஜூன் 18- தேனி மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை பெய்த கனமழை காரண மாக கும்பக்கரை அருவியில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் அணை களுக்கு நீர் வரத்து வர தொடங்கி யுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலை யில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. வெள்ளியன்று மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அணையில் தண்ணீர் வரத்து ஏற் பட்டுள்ளதால் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டம் 130.55 அடியாக உள் ளது. வரத்து 390 கன அடி. திறப்பு 511 கன அடி. நீர் இருப்பு 4826 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 56.43 அடி. வரத்து 80 அடி. திறப்பு 869கன அடி. இருப்பு 2955 மி.கன அடி. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 45 அடி. வரத்து 174 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.18 அடி. திறப்பு 6 கன அடி.
கும்பக்கரையில் குளிக்க தடை
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகனல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்க ளாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கும்பக்கரை அரு விக்கு நீர்வரத்து சற்று அதிகரித் தது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை பிற்பகல் 3 மணி முதல் நள்ளி ரவு வரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. அருவியில் ஏற்பட்டுள்ள வெள் ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி யில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க வும், அருவிக்கு செல்லவும் தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச் சரக அதிகாரி டேவிட் ராஜ் அறி வித்துள்ளார்.
மழையளவு
பெரியாறு- 6.6, தேக்கடி- 5.8, கூடலூர்- 14.8, உத்தமபாளையம்- 0.2, வீரபாண்டி- 21.4, மஞ்சளாறு- 27, சோத்துப்பாறை- 4.5, ஆண்டிபட்டி- 2, போடி- 24, பெரியகுளம் -53 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.