மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் மக்களவைத் தேர்தல் நிதி முதல் தவணையாக ரூ. 5 லட்சத்தை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை வழங்கினார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. லாசர், மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.