districts

தூர்வாரும் பணிகள் ஆய்வு

குடவாசல், மே 21 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள காவிரி ஆற்றுப்பிரிவு சோழ சூடாமணி ஆற்றிலிருந்து பிரியும் ‘ஏ’ பிரிவு வாய்க்கால் மற்றும் அரசவனங்காடு பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணி 4 கி.மீட்டர் தூரம் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில் தூர்வாரப்பட்டு வருகிறது. அரசவனங்காடு பாசன தலைப்பு வாய்க்கால் தூர்வாரும் பணியில் ரெகுலேட்டரிலிருந்து  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடைபெற்று வரும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்து பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பணியின் விவரம் குறித்து கேட்டு அறிந்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.செந்தில், அரசவனங்காடு ஊராட்சி மன்ற தலைவர் எல்.சுலோச்சனா, ஒன்றியக் குழு உறுப்பினர் சி.லோகநாதன், கிளை செயலாளர் சிவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் அரசவனங்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கப்பி மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணியையும் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பார்வையிட்டார்.