districts

விபத்துகளின் போது உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு “நல் இதயங்கள்” விருது

திருவாரூர், ஜூன் 1- இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை அமைச்சகத்தால் “மோட்டார்  வாகன விபத்துகளில் விபத்துக்குள் ளானவர்களை உடனடி உதவியை வழங்குவதன் மூலமும், பொன் னான நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு விரைந்து அனுப்புவதன் மூலமும் பாதிக்கப்பட்டவரின் உயிரை  காப்பாற்றியவருக்கு “Good Sama ritan” (உதவக்கூடிய நல் இத யங்கள்) விருது வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021 அக்டோபர் 15 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங் களாவன, “ரொக்க விருதுகள் மற்றும் சான்றிதழ்கள்” மூலம் பொதுமக்களை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 31 மார்ச் 2026 வரை  செயல்பாட்டில் இருக்கும். ஆபத் தான வாகன விபத்துகளில் உடனடி உதவியை வழங்குவதன் மூலமும், பொன்னான (Golden Hour) நேரத் திற்குள் மருத்துவமனைக்கு விரைந்து செல்வதன் மூலமும், பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப் பாற்றிய எந்தவொரு தனிமனி தனும் இவ்விருதினை பெற தகுதி யுடையவர் ஆவார். ஒவ்வொரு Good Samaritan–க்கும் சம்பவம் ஒன்றுக்கு ரூ.5000 ரொக்கம் மற்றும்  பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். காவல் நிலையம், மருத்துவ மனைகளிலிருந்து பெறப்படும் தக வல்களின் அடிப்படையில் மாவட்ட  அளவில் அமைக்கப்படும் மதிப் பீட்டுக் குழு மற்றும் மாநில அளவி லான கண்காணிப்புக் குழுக்களால் ஒப்புதல் செய்யப்படும் நபர்களுக்கு  மாதந்தோறும் இவ்விருது வழங்கப் படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக் களால் பரிந்துரை செய்யப்படும் பத்து Good Samaritan-களுக்கு இந்திய அரசின் சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் பரிசீலனை செய் யப்பட்டு பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,00,000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங் கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.