districts

img

தோழர் எம். செல்வராசு எம்.பி. உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

திருவாரூர், மே 14 -   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு மே 13 அன்று காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமையன்று நல் லடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நாகை நாடாளுமன்ற உறுப் பினர் எம். செல்வராசு சிகிச் சை பலனின்றி திங்கட்கிழ மையன்று அதிகாலை கால மானார்.

அவரின் உடல் திரு வாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றியம், சித்த மல்லி கிராமத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலை வர்கள்- பொதுமக்கள் என பலரும் எம். செல்வராசு உட லுக்கு அஞ்சலிசெலுத்தினர். அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்று சித்தமல்லியில் உள்ள எம். செல்வராசு தோட்டத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடை பெற்றன. சிபிஐ மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜ யன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண் முகம், மாவட்டச் செயலா ளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி.மாலி, நாகப்பட்டினம் மாவட் டச் செயலாளர் வி. மாரி முத்து, திருவாரூர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கே. பூண்டி  கலைவாணன், திருத்துறைப் பூண்டி சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, நாகை நாடாளுமன்ற தொகு தியின் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் உள்ளிட் டோர் மறைந்த செல்வராஜ் உடலுக்கு மாலை அணி வித்து, அஞ்சலி செலுத்தி யதுடன் இரங்கல் உரை யாற்றினர்.

 அதைத்தொடர்ந்து, முதல் வர் உத்தரவுப்படி 21 குண்டு கள் முழங்க அரசு மரியாதை யுடன் எம். செல்வராசு எம்.பி. உடல் அடக்கம் நடைபெற் றது. அரசு மரியாதை வழங்கும் நிகழ்வில் திருவா ரூர் எஸ்.பி. ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

;