districts

img

உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

திருவள்ளூர், பிப்.28- ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சி ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற காத்திருக்கும் போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவிற்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சி கள் உள்ளன. இவற்றில் தூய்மை பணியாளர், தூய்மை காவலர்கள், ஒஎச்டி ஆப்ரேட்டர்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். சுகாதார மேம்பாட்டிற்காக தினம் பாடும், சமூகத்தில் அடிதட்டில் உள்ள தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய 7 வது ஊதிய  குழு நிலுவை தொகை  64 மாதமாக வழங்கப்பட வில்லை இதனை உடனடி யாக வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் ஒஎச்டி ஆப்ரேட்டர்களுக்கு நிர்ணயித்த மாத ஊதியம் ரூ.5440 வழங்க வேண்டும், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு 6 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி  திங்களன்று (பிப் 27) காலை முதலே பிடிஒ அலுவலகம் உள்ளேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஆட்சியரிடம் தெரிவித்து பின்னர் நடவ டிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளனர்.  இதற்கு சங்க தலை வர்கள் ஒப்புக்கொள்ள வில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாலை 7 மணியளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள், பசுபதி ஆகியோர் மார்ச் 15 ம் தேதிக்குள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற் றப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் முடிவிற்கு வந்தது.  போராட்டத்திற்கு  மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஜி.கணேசன் தலைமை தாங்கினார். இதில் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் சி.பெருமாள், உள்ளாட்சி  ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.குமர வேல்,  சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் சிவா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுமதி, மாதர் சங்க பகுதி   தலைவர் ஆர்.வித்யா உள்ளிட்ட பலர் பேசினர்.