districts

img

பட்டா வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம்: மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்

திருவள்ளூர், அக். 19- திருத்தணி வட்டத்திற்குட்பட்ட செருக்கனூர் ஊராட்சிமன்றம் பங்களாமேடு இருளர் காலனி,  வீரகநல்லூர் பகத்சிங் நகர் இருளர் காலனி, பீரக்குப்பம் இருளர் காலனி, கோரமங்கலம், குமாரகுப்பம் குளம்,  வி.கே.ஆர்.புரம் ஆகிய  ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு மாற்று இடம் மற்றும் குடிமனைப் பட்டா,  தொகுப்பு வீடு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக். 17 அன்று  காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. குடிமனைப் பட்டா தயாராக இருந்தும் அதிகாரிகள் கொடுக்க மறுத் துள்ளனர். 50 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் மக்களுக்கு பட்டாவை வழங்கா மல்  இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிக ளுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.