பொன்னேரி, நவ.8- மீஞ்சூர் அருகே உள்ள நெய்த வாயல் ஊராட்சியில் கிராம எல்லை மற்றும் ஏரியின் அருகே மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரி யன் வாயல் பகுதியில் இருந்து மாடு, ஆடு, கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் குவியலாக கொட்டப் படுவதாக கூறப்படு கிறது. இந்த இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்துக் கொண்டு சாலை மீது வரும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் நாய்கள் மீது மோதி பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் குப்பை கொட்டுவதை கண்டித்து நெய்த வாயல் கிராம மக்கள் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.