districts

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆசிரியரை கைது செய்யக்கோரிக்கை

திருவள்ளூர், டிச.8- சாதி சொல்லி இழிவுப் படுத்திய தலைமை ஆசிரி யர் உஷாராணியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்ய  வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் அருகில் உள்ள  தத்தை மஞ்சி அரசு நடு நிலைப் பள்ளியில் இருளர் இன மாணவர்களை பள்ளி யில் தனியாக அமரவைப்ப தும், சாதி பெயரை சொல்லி  தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியை உஷா ராணி மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருளர் இன மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடந்த 7 நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து வந்தனர்.  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்ததால் கடந்த இரண்டு நாட்களாக இருளர் இன மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட  நிர்வாகம் தலைமை ஆசிரியை உஷா ராணியை  பணியிட மாற்றம் செய்துள் ளது ஏற்கத்தக்கது அல்ல. இது கண்துடைப்பு நாடகம்  என பெற்றோர்கள் விமர்ச னம் செய்துள்ளனர். பள்ளி குழந்தைகள் மத்தியில் சாதி பிரிவினையை தூண்டும் விதத்தில் நடந்து  கொண்ட தலைமை ஆசிரியை உஷாராணி மீது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.