திருவள்ளூர், செப்.8- திருபெரும்புதூரில் இருந்து தனியார் தொழிற் சாலையில் பணிபுரியும் 30 பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து வியாழனன்று காலை விபத்துக்குள்ளானது. திருவள்ளூரை அடுத்த தொடுகாடு தனியார் மருத்து வமனை அருகே வந்த போது எதிரே வந்த வாகனத் துக்கு வழி விடுவதற்காக இடதுபுறமாக பேருந்தை ஓட்டுநர் காளிமுத்து திருப்ப முயன்றபோது கட்டுப் பாட்டை இழந்தது. இதனால் மூடப்பட்டிருந்த கடையினுள் புகுந்தது நின்றது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பேருந் தில் இருந்த 30 பணியாளர் கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.