districts

img

இருளரின் குடிசையை அகற்ற முயற்சித்த அதிகாரி: தடுத்து நிறுத்தியது செங்கொடி

திருவண்ணாமலை, ஜூன் 23- திருவண்ணாமலை அடுத்த எடப்பாளை யம் எம்ஜிஆர் நகர் பகுதியில் இருளர் இனத்தை சேர்ந்த  ஏழுமலை குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து, கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். மேலும், வீட்டின் அருகே உள்ள சிறிதளவு நிலத்தில் விவசாயமும் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு எழுமலை குடும்பத்தினர் வசித்து வந்த குடிசை வீட்டை, ஊராட்சி மன்ற பொது பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாகக் கூறி, ஊராட்சி மன்றத் தலைவரின் ஆட்கள் பிரித்தெறிந்தனர். மழைக் காலம் என்பதால் ஒதுங்கக்கூட மாற்று இடம் இல்லாமல் பரிதவித்த ஏழுமலை குடும்பத்தினர் அதே இடத்தில் பழைய பேனர்களை கொண்டு ஒன்டி குடிசை அமைத்தனர். இதையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஊராட்சிமன்றத் தலைவர் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையோடு, நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு என குடிசையை பிரிக்க முயற்சித்தனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வம், ஒன்றியச் செய லாளர் எஸ்.ராமதாஸ், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பலராமன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், நிர்வாகிகள் பழனி, ஏகாம்பரம், ஜெனார்தனன், அழகேசன் ஆகியோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, பிரச்சனைக்குரிய இடம் நீர்நிலை புறம்போக்கு அல்ல என்றும் தரிசு புறம்போக்கு என்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கொடுத்து குடிசையை பிரிக்கும் முயற்சியை முறியடித்தனர்.