திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், விசிக வழக்கறிஞர் நாகராஜன், மக்கள் புரட்சி கழக நிறுவன தலைவர் மா.ப.வர்கீஸ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் என்.ஏ.கிச்சா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.