திருவண்ணாமலை, மே 14- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்முடியனூர் ஊராட்சி அம்மாப்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆவின் பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அம்மாப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் மற்றும் பால் பவுடர் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்டது. இந்த பால் பண் ணையில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் பால் பவுடர், 10 மெட்ரிக் டன் வெண்ணெய் மற்றும் 5 மெட்ரிக் டன் நெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை வாழ் மக்களுக்காக 500 மெட்ரிக்டன் பால் பவுடர் நிவாரண பொருட்கள் வழங் குதவதற்கான பணிகள், திருவண்ணாமலை மாவட்டம் அம்மாப்பாளை யம், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் அமைந் துள்ள பால் பவுடர் தொழிற் சாலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து இலங்கை மக்களுக்காக ஆவின் நிறு வனத்தின் மூலம் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் வழங்கப்பட உள்ள நிலையில் நிவாரண பொருட்கள் தயாரிப்பு பணி களை தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சனிக்கிழமை (மே 14) நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உடன் இருந்தார்.