districts

img

தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்: உடுமலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது

தொழிற்சங்களிங்களில் நாடு தழுவிய போராட்டம் துவங்கிய சூழலில் உடுமலையில் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்ட விரோத தொகுப்புகளை கை விடவேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட 10 மத்திய சங்கங்கள் இணைந்துள்ளன.
தமிழகத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 320 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.