திருப்பூர் ஜூன் 15- உடுமலையில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 59 லட் சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப் பட்டன. கோவை மற்றும் திருப்பூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து பாங்க் ஆஃப் பரோடா கிளைகளும் இணைந்து , உடு மலையில் கால்நடை வளர்ப்பு விவசா யிகளுக்கு கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாங்க் ஆஃப் பரோடா கால்நடை வளர்ப்பு விவசாய கடன் வழங்கல் தினத்தை 15ம் தேதி கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு உடுமலையில், கால்நடை வளர்ப்பு கடன் வழங்கும் முகாம், சென்னை மண்டல பொது மேலாளர் ஏ.சரவணகுமார் மற்றும் சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் சலபதிநாயுடு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 1132 கால்நடை விவ சாயிகளுக்கு ரூ 4 கோடியே 59 லட் சம் மதிப்பிலான கடன் உதவி ஆணை கள் வழங்கப்பட்டன. இதில் சுகுணா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், முதுநிலை பொது மேலா ளர் அருளானந்த கிருஷ்ணன், கால் நடை பராமரிப்பு துறை இணை இயக்கு நர் டாக்டர் பாரிவேந்தன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்கு மார் உள்பட அதிகாரிகள் பங்கேற்று அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினர். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.