அவிநாசி, ஜூன் 16- அவிநாசி அருகே சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் வியாழனன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் ரத்ததானம் செய்து தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ், சுகாதார ஆய் வாளர் ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதைத்தொ டர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழுக்கள் ரத்தம் சேகரித்தனர். இம்முகாமில் மொத்தமாக 48 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதன்பின், ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.