பொன்னமராவதி, ஜூன் 24 - கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட் களை தடுக்கவும், மருத்துவ மாணவர்களுக்கு தீங்கி ழைக்கக் கூடிய ஒன்றிய அரசின் நீட் தேர்வை முற்றி லும் கைவிட வலியுறுத்தி யும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் லதா, வாலிபர் சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்த னர். வாலிபர் சங்கத்தின் முன் னாள் ஒன்றியச் செயலா ளர்கள் பக்ருதீன், குமார், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் மதியரசி, சிஐடியு ஒன்றியத் தலைவர் சாத்தையா ஆகியோர் முன் னிலை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மகாதிர், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் வைகை ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.