districts

img

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ‘அந்திக்கடை சந்தை’ மீட்கப்படுமா?

தமிழ்நாட்டின் கடற்கரை நகரங்களில் பழமையான தும், புராதனமானதுமான நாகப்பட்டி னம் துறைமுகம் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ‘’சோழர்களின் ஏரி’’ என்று வர்ணிக்கப் பட்ட வங்கக் கடலின் துறைமுக பகுதி யாக கருதப்படும் நாகை துறைமுகம் கடல் கடந்த தேசங்களில் இருந்த வர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தது.  போர்ச்சுக்கல், டச்சு, டேனிஷ், ஆங்கிலேயர்கள் என ஒவ்வொரு  காலக்கட்டத்திலும் இந்நிலப் பரப்பை ஆள்வதற்கும் வணிகம் செய் வதற்கும் நுழைந்த அயல் குடிகள் இந்த துறைமுக பகுதியை பயன்படுத்தியுள்ளனர். அங்குள்ள பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு அவர் களுக்கு ஒரு சந்தையும் தேவைப் பட்டது.  நாகை துறைமுகமும் அதனை  ஒட்டிய நாகை நகரமும் வணிகத்தள மாக விளங்கின. மலேசியா, சிங்கப் பூர், பினாங்கு, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியா, தமிழ்நாட்டிற்கு வருபவர்கள், நாகை  துறைமுகத்தின் வழியாக வந்து தாங்கள் எடுத்து வந்த பொருளை தமிழ்நாட்டு வியாபாரிகளிடம் விற்று விட்டு சுற்றிப் பார்த்துச் செல்வது வழக்கம். அப்படி வெளிநாட்டு பொருட்கள்  கிடைக்கும் வியாபார சந்தையாக விளங்கிய இடம் நாகை நகரத்தின் மையப் பகுதியாக இருக்கும் ‘’அந்திக்கடை’’ பகுதியாகும். வெளி நாட்டிலிருந்து வரும் அனைத்து பொருட்களும் இந்த சந்தையில் கிடைக்கும். பல நூற்றாண்டுகளைக் கடந்த இச்சந்தையில் சுமார் 40 தட்டு கடைகளுடன், மாலை 3 மணி துவங்கி  இரவு 10 மணி வரை வியாபாரம்  நடக்கும். ஒவ்வொரு கடையும் 6x4  என்ற அளவில் இருக்கும்.

பெட்ரோ மாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நடக்கும்  வியாபாரத்தின் போது, அக்கடை களில் அனைத்து விதமான பொருட் களும் கிடைக்கும்.  எஸ்.எஸ்.ரசூலா, வ.உ.சிதம் பரம் போன்ற கப்பல்கள் நாகை துறை முகத்திற்கு வந்து சென்ற காலக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அப்போக்குவரத்தை நம்பி பிழைப்பு நடத்தினர். வெங்காய இறக்குமதிக்கு என்று தனித் தெருவே  இருக்கிறது. தற்போது ‘வெங்காய  கடைத்தெரு’ என்று பெயரளவில்  இருக்கிறது. கப்பல் போக்கு வரத்து நிறுத்தப்பட்ட பிறகு வியா பாரமில்லாததால், அந்திக்கடை தனது செல்வாக்கை இழந்துள்ளது. வெளிநாட்டு பொருட்களை வாங்குவதற்காக சென்னை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து, நாகப்பட்டினத்தில் இருக் கிற அந்திக்கடைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் சென்ற வியாபா ரிகளும் உண்டு. முதலை மார்க்  பச்சை பெல்ட், வாசனை திரவி யங்கள், கைக் கடிகாரங்கள், துணி வகைகள், பச்சை தைலம், கோடாலி தைலம், பேரீச்சம்பழம் என பல ஆயிரக்கணக்கான ரூபாய்களில் வர்த்தகம் செய்யப்பட்ட இடம் அந்தி கடையாகும். ஆங்கிலேயர்களால் ‘ஈவினிங் பஜார்’ என்று அழைக்கப்பட்டு அவர் களின் வர்த்தக தளமாக செயல்பட்டி ருக்கிறது இது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த இடம் காலப் போக்கில் அதன் பெருமையை இழந்து, தற்போது அப்பகுதி ‘குப்பைகளை கொட்டும் தளமாக’ மாறியிருக்கிறது.  

நாகப்பட்டினம் நக ராட்சியால் ‘முனிசிபல் ஈவினிங் பஜார்’ என்று வைக்கப்பட்ட பெயர்  பலகை இன்னமும் கம்பீரமாக காட்சி யளிக்கிறது. அதனையொட்டி அந்திக் கடைகள் நடைபெற்ற இடம்  சுருக்கப்பட்டு காலியிடமாக கிடக்கிறது.  1986 வரை நகராட்சி நிர்வாகத் தால் 3 சதவீத வரி விதிக்கப்பட்டு அந்திக் கடைகளின் மூலம் நக ராட்சிக்கு வருமானமும் கிடைத்திருக் கிறது. நான்கு பக்கங்களிலும் தனி யார் கடைகள் சூழப்பட்டு காலங்கா லமாக நாகை நகருக்கு அடையாள மாக திகழ்ந்த ‘ஈவினிங் பஜார்’ குப்பை மேடாக காட்சியளிப்பது வருத் தத்திற்குரியது. நாகை நகரத்தின் முக்கியமான கடைத் தெருவில் இப்பகுதி இருப்ப தால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகம் சுளித்து மூக்கை  பிடித்துக் கொண்டு கடந்து செல்வது கவலைக்குரியது. மாவட்டத்தில் உள்ள மக்கள் ‘அந்திக்கடை சந்து’ என்று உதட்டளவில் உச்சரிக்கும் இடம் காலப்போக்கில் காணாமல் போய் அஞ்சல் முகவரிக்கான அடையாளமாக மாறிவிடக்கூடாது.  நாகப்பட்டினம் நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இதைக் கவனத் தில் கொண்டு நாகை மாவட்டம் இழந்த அடையாளத்தை மீட்கும் பொருட்டு, மீண்டும் அவ்விடத்தில் வியாபாரத் தளத்தை ஏற்படுத்தி அந்திக் கடைகள் இருந்த பகுதியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நாகை நகர  மக்களின் மிக முக்கியமான கனவா கும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகை நகர செய லாளர் க.வெங்கடேசன், அந்தி கடை கள் இருந்த இடத்தில் மீண்டும் வணிக  வளாகத்தைக் கட்டி மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் என  நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை  விடுத்துள்ளார்.  - ஆதி.உதயகுமார்