districts

நீர்நிலைகளை தனிநபர்கள் உரிமை கோர முடியாது

பொன்னமராவதி, ஆக.6 -

      புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி தாலுகா ஆர்.பாலகுறிச்சி பகுதி யைச் சேர்ந்தவர் குமார். இவர் மதுரை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

     எங்கள் கிராமம் பிரான்மலை பகுதியில் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வறண்ட வனப்பகுதி. இங்குள்ள சிறிய  குளங்களில் மழைக்காலங்களில் சேமிக்கப் படும் தண்ணீர் தான் கிராம மக்களுக்கும் வன  விலங்குகளுக்கும் பயன்படுகிறது. இங்குள்ள சின்னக் கருப்பன் ஏந்தல் கண் மாய், தச்சன் ஊரணி நீரைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.  

    இந்நிலையில், இந்த நீர்நிலைகள் அடங்கிய பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கி ரமித்துள்ளனர். அதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, 25 வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தை கிரயம் செய்ததாக கூறு கின்றனர். அங்கு பல்வேறு மரங்களை நட்டு  பராமரித்து வருகின்றனர். இதனால் எங்கள்  கிராம மக்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளது.  

     மேலும் வனவிலங்குகள் தண்ணீருக்காக கிராமத்துக்குள் புகுந்து குழந்தைகள் மற்றும் மக்களை தாக்குகின்றன. இதனால் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பினால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.  எனவே சின்னக்கருப்பன் ஏந்தல் கண்மாய்,  தச்சன் ஊரணி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி களில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய நிலைக்கு மீட்க அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும்.  

     இவ்வாறு அதில் கூறியிருந்தார்.  

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, “இந்த நீர்நிலைப் பகுதியில் உள்ள நிலங்களை தங்க ளின் முன்னோர்கள் அனுபவ பாத்தியத் தில் வைத்திருந்ததாக தனிநபர் கூறுவதை  ஏற்க இயலாது. நீர்நிலைப் பகுதிகளுக்கு தனி நபர்கள் உரிமை கோர முடியாது. அந்த நீர்நிலையை உடனடியாக உள்ளாட்சி நிர்வா கம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

    நீர் நிலையாகவே இந்த பகுதியை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.