தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் பிரேம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தும், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் நிறைவு செய்தும் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் அன்பு, பழனியப்பன் கலந்து கொண்டனர்.