districts

உடுமலை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி

உடுமலை, டிச.5-  உடுமலை அருகே நள்ளிரவில் வீடுக ளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள்  அவதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம். உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நேரு நகர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்நிலையில், சனியன்று மாலை  உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பெரியகுளம் நிரம்பி அதன் உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறி நேரு நகர் ஆதிதிராவிடர் காலணி குடி யிருப்பு பகுதிக்குள் புகுந்தது.  இதனை தொடர்ந்து, சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மக் களை மீட்டு அருகில் உள்ள அரசு பள்ளி யில் தங்க வைத்தனர்.பின்னர் ஞாயி றன்று காலை பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உணவு வழங்கிய அதிகாரி களிடம், அப்பகுதியில் ஆய்வு மேற் கொண்டு மீண்டும் வெள்ளநீர் செல்லா மல் இருக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுகொண்டனர்.

;