districts

இன்று திருச்சி ரயில்வே கூட்டுறவு சொசைட்டி தேர்தல்

கரூர், ஆக.22-

     திருச்சி ரயில்வே கூட்டுறவு சொசைட்டி  தேர்தல் வியாழக்கிழமை (ஆக.23) அன்று  நடைபெற உள்ளது. இத்தேர்தல் சேலம்,  போத்தனூர் ஒர்க்ஷாப், பாலக்காடு மண்ட லம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்தா வது மண்டலத்தில் நடைபெறுகிறது.  

      தேர்தலில் இயக்குநர் பதவிக்கு, டிஆர்  இயு சேலம் மண்டல செயலாளர் ஏ.அல்லி முத்து 1 ஆவது எண்ணிலும், பாலக்காடு  மண்டல பொதுச் செயலாளர் கே.உதய பாஸ்கரன் 10 ஆவது எண்ணிலும், ஏ. சோலைராஜு 9 ஆம் எண்ணிலும், ஆர்.ரேணுகாதேவி 43 ஆம் எண்ணிலும், எஸ்.சி /எஸ்.டி ஒதுக்கீடு சார்பில் பி.உச்சிமகாளி 55 ஆம் எண்ணிலும் போட்டியிடுகின்றனர்.

      இவர்கள் கரூர் ரயில் நிலையம்,  அனைத்து எஸ்.எஸ்.சி அலுவலகங்களி லும் உள்ள ஊழியர்கள், அலுவலர்கள், தொழிலாளர்களிடம் தங்களுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்ட எண்களில் வாக்களித்திட வேண்டும் என தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

      இத்தேர்தல் குறித்து இவர்கள் பேசு கையில், “ரயில்வே துறையில் உள்ள சொசைட்டி உறுப்பினர்களுக்கு வழங்கும் அனைத்து கடன்களுக்கும் தற்போது 12 சதவீதம் வட்டி உள்ளது. இந்த வட்டியை 8 சதவீதமாக குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

      உறுப்பினர்களின் குடும் பத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். சிஎம்டிடி கடனை ரூ.5 லட்சமாக உயர்த்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்  கப்படும். தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் டிஆர்இயு (சிஐடியு) சங்கத்திற்கு தங்க ளது வாக்குகளை அளித்து தொழிலா ளர்களை பாதுகாத்திடவும், ரயில்வே துறை யை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை  தடுத்து நிறுத்திடவும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றனர்.

     டிஆர்இயு மத்திய சங்க முன்னாள் துணைச் செயலாளர் எஸ்.சாம்பசிவன், சேலம் கோட்ட முன்னாள் துணைத் தலை வர் கே.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு, ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் மூவீங்  முறையில் நடைபெறும். காலை 8 மணிக்கு  வாக்குப் பதிவு துவங்கி, மாலை 5 மணிக்கு  நிறைவடையும். ஈரோடு - கரூர், திருச்சி  மலைக்கோட்டை- வீரராக்கியம், எரி யோடு - வெள்ளியணை ஆகிய மார்க்கங்க ளில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள  அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலா ளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்  வர்.