districts

img

பிளஸ்-2 தேர்வில் சாதித்த திருச்சி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி

திருச்சிராப்பள்ளி, மே 9-

    திங்கள்கிழமை வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருச்சி ராப்பள்ளி (வார்டு எண் 14) கீழ  அரண் சாலையில் உள்ள  மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளி 100 சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த  மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி யில் தேர்வெழுதிய 25 மாணவர் களில் 12 பேர் மாணவிகள். 13 பேர்  மாணவர்கள்.

   கே.சுப்ரமணி என்ற மாணவர் 600-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்  றார். சிறு வயதிலேயே பெற்றோரை  இழந்த சுப்ரமணி, காந்தி மார்க்கெட்  டில் தினக்கூலித் தொழிலாளியான தனது மூத்த சகோதரரின் பராம ரிப்பில் இருந்து வருகிறார். கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டப்  படிப்பைத் தொடர விரும்புவதாகக் கூறினார்.

   ஆர்.காயத்ரி என்ற மாணவி தனது குடும்பத்தில் ஐந்து பிள்ளை களில் இரண்டாவது ஆவார். 492 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஆர். காயத்ரி கணினி (பொறியியல்) அறி வியல்  உயர் கல்வியை தொடர விரும்புகிறார்.

  இப்பள்ளியைச் சேர்ந்த மாண வர்கள் பலர் கடுமையான பொரு ளாதாரப் பின்னணியைச் சேர்ந்த வர்கள், இதனால் அவர்கள் தங்கள்  குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது அவர்களின் கல் விக்கு இடையூறு இருந்துள்ளது. 2022-23-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் சேர்ந்த 36 மாண வர்களில் 25 பேர் மட்டுமே பள்ளிக்கு தவறாமல் வந்து தேர்வெழுத முடிந்துள்ளது என்றார் இப்பள்ளி யின் கணித ஆசிரியர்.  

  இப்பள்ளி 2009-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம்  உயர்த்தப்பட்டது, திருச்சிராப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை  வழங்கும் ஒரே மாநகராட்சிப் பள்ளி  இதுதான். தற்போது 242 மாண வர்கள் மற்றும் 17 ஆசிரியர்களு டன் இயங்கி வரும் இப்பள்ளியில் கூடுதலாக மூன்று வகுப்பறைகள் மற்றும் நூலகம் தேவை என்கின்ற னர் பள்ளி ஆசிரியர்கள்

செம்பனார்கோவில் அரசுப்பள்ளி

  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  பிளஸ்-டு  பொதுத்தேர்வில் 96 சத வீதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அள வில் அரசுப் பள்ளிகளில் மூன்றாமி டமும மதிப்பெண்கள் அடிப்படை யில் அரசுப்பள்ளிகளில் முதலிட மும் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய  178 மாணவிகளில், 171 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி காயத்ரி 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில்  அரசுப்பள்ளி மாணவிகளில் முதலிடம் பெற் றுள்ளார். இப்பள்ளி மாணவிகள், வேதியியல், உயிரியல், தாவர வியல், விலங்கியல், கணினி அறிவி யல், வரலாறு, கணினி பயன்பாடு கள் பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி  பெற்ற மாணவிகளை, தலைமை ஆசிரியர் ரமா மற்றும் ஆசிரியர் கள், பெற்றோர்கள் பாராட்டினர்.