திருச்சிராப்பள்ளி, ஆக.9 - திருச்சி சிந்தாமணி எதிரில் உள்ள சந்தா னம் டவரில் ஆக.10 (புதன்கிழமை) அன்று 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் திறப்பு விழா நடைபெறுகிறது. அனைத்து நவீன ஸ்கேன் வசதிகள், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, கலர் டாப்லர் ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு திறக்கப்பட உள்ளது. இங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேன்-ன் சிறப்பு அம்சங்கள், 20 நிமிடத்தில் ஸ்கேன் எடுத்துவிடலாம். சப்தம் குறைவாக இருக்கும். 24 மணி நேரமும் இயங்கும். அவசர ஊர்தி வசதி உள்ளது. உடனுக்குடன் ரிப்போர்ட் செய்ய மருத்துவர்கள் குழு உள்ளது. படங்கள் துல்லியமாக, தெளிவாக இருக்கும். இங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேனில் நரம்பி யல் சம்பந்தமான புதிய தொழில்நுட்பம் உள்ளதால் அனைத்து வியாதிகளையும் கண்டறிய முடியும். உதாரணமாக ஒரு வருக்கு மூளையில் கட்டி இருந்தால் அவரை கை, கால்களை ஆட்டச் சொல்லியும், பேச சொல்லியும், ஸ்கேன் எடுக்கலாம். இதனால் அறுவை சிகிச்சை / மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக சிகிச்சை செய்ய முடியும். மூளை பகுதியில் டிபி நோய் ஏற்பட்டால் அதற்கு ஸ்பெக்ட்ரோஸ்கோபி முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து எளிதாக கண்டறி யலாம். இதுபோன்ற நவீன பயன்பாடுகள் உள்ளன.
நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் தண்டுவட நோய்கள், உடலின் சதை பகுதி யில் ஏற்படும் பாதிப்புகள், முட்டி பகுதி யில் ஏற்படும் பாதிப்புகள், வயிற்றில் கணை யம், ஈரல், பித்தப்பை, பித்த குழாய் பகுதி களில் ஏற்படும் பாதிப்புகளையும் துல்லிய மாக அறியலாம். பெண்களுக்கு மார்பக கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகளில் ஏற்படும் புற்றுநோ யில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். காது, மூக்கு, தொண்டை பகுதி யில் ஏற்படும் பாதிப்புகள், கட்டிகளையும் எளிதாக கண்டறிய முடியும். எம்ஆர்ஐ ஸ்கேன் ரேடியேஷன் இல்லாத பாதுகாப்பான இயந்திரம் ஆகும். கருடா ஸ்கேனில் ரத்த பரிசோதனைகள், உடல் உறுப்பு முழு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படும். ஸ்கேனில் 12 வருடங்கள் அனுபவம் பெற்ற நாங்கள், நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளை யும் ஏற்படுத்தி உள்ளோம். சிடி ஸ்கேன் மூலம் வயிற்றுப் பகுதி மற்றும் உடல் பகுதி யில் கட்டிகள் இருந்தால் திசு பரிசோதனை செய்யலாம். ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கசிவுகள் உடலின் எந்த பகுதியில் ஏற்பட்டா லும் கண்டறியலாம். அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டு நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து, பரிசோதனை செய்து, அவர்களை ரிப் போர்ட்டுடன் செல்லுமாறு பார்த்துக் கொள் வார்கள். அவசர ஊர்தி வசதி 24 மணி நேரம் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு Anten atal ஸ்கேன் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் தனி யாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டா யம் முன்பதிவு அவசியம். கருடா ஸ்கேன் திறப்பு விழாவை, எங்கள் குடும்பப் பெரியவர்கள் காலை 11 மணி அள வில் குத்து விளக்கேற்றி திறந்து வைப்பார்கள். சக மருத்துவர்கள், நண்பர்கள், உறவினர் கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத் தில் ஸ்கேன் செய்யப்படும் என மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.